ஸ்குவாஷ் உலகக் கோப்பை இன்று சென்னையில் தொடக்கம் - இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கேற்பு

ஸ்குவாஷ் உலகக் கோப்பை இன்று சென்னையில் தொடக்கம் - இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கேற்பு
Updated on
2 min read

சென்னை: எஸ்​டிஏடி ஸ்கு​வாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை​யில் இன்று (9-ம் தேதி) தொடங்​கு​கிறது.

வரும் 14-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் போட்​டியை நடத்​தும் இந்​தி​யா, ஈரான், ஜப்​பான், மலேசி​யா, கொரி​யா, ஹாங் காங், எகிப்​து, தென் ஆப்​பிரிக்​கா, போலந்​து, சுவிட்​சர்​லாந்​து, ஆஸ்​திரேலி​யா, பிரேசில் ஆகிய 12 நாடு​கள் கலந்து கொள்​கின்​றன.

போட்​டிகள் எஸ்​டிஏடி அகாடமி மைதானம், எக்​ஸ்​பிரஸ் அவென்யூ மால் ஆகிய​வற்​றில் நடத்​தப்பட உள்​ளன. இந்த போட்​டியை நடத்​து​வதற்​காக தமிழக அரசு ரூ.3.30 கோடி நிதியை ஒதுக்​கி​யுள்​ளது.

இந்​தத் தொடருக்​கான 4 பேர் கொண்ட இந்​திய அணி​யில் தமிழகத்​தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்​னப்​பா, அபய் சிங், வேல​வன் செந்​தில் குமார் ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். இவர்​களு​டன் டெல்​லியை சேர்ந்த அனஹத் சிங்​கும் அணி​யில் உள்​ளார். அபய் சிங், இந்​திய ஸ்கு​வாஷில் முதல்

நிலை வீர​ராக உள்​ளார். அதேவேளை​யில் அனஹத் சிங், முதல் நிலை வீராங்​க​னை​யாக வலம் வரு​கிறார். ஜோஷ்னா சின்​னப்​பா, காமன்​வெல்த் விளை​யாட்​டில் தங்​கப் பதக்​கம் வென்​றுள்​ளார்.

வேல​வன் செந்​தில் குமார் முதன்​முறை​யாக உலகக் கோப்பை தொடரில் விளை​யாட உள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு சென்​னை​யில் நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி வெண்​கலப் பதக்​கம் பெற்​றிருந்​தது. அதேவேளை​யில் எகிப்து தங்​கப் பதக்​க​மும், மலேசியா வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றிருந்​தன.

போட்​டிகள் லீக் மற்​றும் நாக் அவுட் முறை​யில் நடத்​தப்​படு​கிறது. தொடரில் கலந்து கொண்​டுள்ள 12 அணி​களும் 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் 3 அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.

ஒவ்​வொரு அணி​யும் தனது பிரி​வில் இடம் பெற்​றுள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். ஒரு மோதலில் 4 ஆட்​டங்​கள் இடம் பெறும். ஒவ்​வொரு அணி​யிலும் 2 வீரர்​கள், 2 வீராங்​க​னை​கள் இடம் பெறு​வார்​கள். ஒரு செட் 7 புள்​ளி​களை கொண்​ட​தாக இருக்​கும். பெஸ்ட் ஆஃப் 5 அடிப்​படை​யில் செட்​கள் அமை​யும்.

லீக் சுற்​றின் முடி​வில் ஒவ்​வொரு பிரி​விலும் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறும். கால் இறுதி ஆட்​டங்​கள் 12-ம் தேதி​யும், அரை இறுதி ஆட்​டங்​கள் 13-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன. சாம்​பியன் பட்​டத்தை வெல்​வது யார்? என்பதை தீர்​மானிக்​கும் இறு​திப் போட்டி 14-ம் தேதி நடை​பெறுகிறது.

இந்​தியா ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் பிரேசில், சுவிட்​சர்​லாந்து அணி​களும் இடம்பெற்​றுள்​ளன. தொடக்க நாளான இன்று இந்​தியா தனது முதல் ஆட்​டத்​தில் சுவிட்​சர்​லாந்​துடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் மாலை 6 மணிக்கு எக்​ஸ்​பிரஸ் அவென்யூ மாலில் நடை​பெறுகிறது.

சென்​னை​யில் நடை​பெற உள்ள 5-வது உலகக் கோப்பை தொடர் இது​வாகும். 1996 மற்​றும் 1999-ம் ஆண்டு நடத்​தப்​பட்ட தொடர்​களில் ஆஸ்​திரேலியா சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது. 2011 மற்​றும் 2023-ம் ஆண்டு நடத்​தப்​பட்ட தொடர்​களில் எகிப்து அணி வாகை சூடி​யிருந்​தது. அந்த அணி ஹாட்​ரிக்​ பட்​டம்​ வெல்​லும்​ முனைப்​புடன்​ களமிறங்​க உள்​ளது.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை இன்று சென்னையில் தொடக்கம் - இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கேற்பு
சட்டப்பேரவை தேர்தலில் திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியத்துவம் பெறும்: ஹெச்​.​ராஜா கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in