சட்டப்பேரவை தேர்தலில் திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியத்துவம் பெறும்: ஹெச்​.​ராஜா கணிப்பு

சட்டப்பேரவை தேர்தலில் திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியத்துவம் பெறும்: ஹெச்​.​ராஜா கணிப்பு
Updated on
1 min read

ஈரோடு: ‘தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் முக்​கிய​மாக இருக்​கும்’ என்று பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா தெரி​வித்​தார். கோபிச்​செட்​டி​பாளை​யத்​தில், திருமண நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

இந்து விரோத அரசு: திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் கார்த்​திகை தீபம் ஏற்ற முடி​யும் என மதுரை உயர் நீதி​மன்​றம் கூறி​யிருந்​தது. நீதிபதி சுவாமி​நாதன் நேரடி​யாக சென்று பார்​வை​யிட்டு வந்​தார்.

இந்த அரசு இந்து விரோத அரசாக செயல்​பட்டு வரு​கிறது. முரு​க​னுக்கு சொந்​த​மான இடத்​தில் தீபத்தை ஏற்​று​வதை எப்​படி தடுக்க முடி​யும். வரப்​போகும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திருப்பரங்குன்றம் தீபம் பிரச்​சினைதான் பிர​தான​மாக இருக்​கும்.

இதன்​மூலம் திமுக அரசை வெளி​யேற்​று​வோம். டிச.12-ம் தேதிக்​குள் திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் தீபம் ஏற்றப்பட வேண்​டும். அதி​முக - பாஜக கூட்​ட​ணிக்கு பழனி​சாமி தலை​வ​ராக உள்​ளார். தமிழகத்​தில் நிச்​ச​யம் மாற்​றம் நிகழும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

சட்டப்பேரவை தேர்தலில் திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியத்துவம் பெறும்: ஹெச்​.​ராஜா கணிப்பு
பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநரை அவமதிப்பது சரியல்ல: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in