முலான்பூரில் இன்று 2-வது டி20 ஆட்டம்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

முலான்பூரில் இன்று 2-வது டி20 ஆட்டம்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி
Updated on
2 min read

முலான்பூர்: இந்தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு முலான்பூரில் உள்ள மகா​ராஜா யாத​விந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்கெட் மைதானத்​தில் நடை​பெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் கட்​டாக்​கில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி 101 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றி பெற்​றிருந்​தது.

இந்த ஆட்​டத்​தில் 176 ரன்​கள் இலக்கை துரத்​திய தென் ஆப்​பிரிக்க அணி 12.3 ஓவர்​களில் 74 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து படு​தோல்​வியை சந்​தித்​தது. 5 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் 2-வது போட்டி முலான்​பூரில் இன்று நடை​பெறுகிறது.

முதல் ஆட்​டத்​தில் சிவப்பு மண் ஆடு​களத்​தில் இந்​திய அணி​யின் டாப் ஆர்​டர் பேட்​ஸ்​மேன்​களான அபிஷேக் சர்​மா, ஷுப்​மன் கில், சூர்​யகு​மார் யாதவ் ஆகியோர் விரை​விலேயே ஆட்​ட​மிழந்த நிலை​யில் ஆல்​ர​வுண்​ட​ரான ஹர்​திக் பாண்​டி​யாக அதிரடி​யாக விளை​யாடி 28 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​கள் விளாசி இந்​திய அணி வலு​வான இலக்கை கொடுக்க உதவி​யாக இருந்​தார்.

திலக் வர்​மா, அக்​சர் படேல் ஆகியோ​ரும் உரிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​படக்​கூடும். அதே​போன்று முதல் ஆட்​டத்​தில் 17 ரன்​களில் ஆட்​ட​மிழந்த அபிஷேக் சர்​மா​வும் மட்​டையை சுழற்​று​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

அதேவேளை​யில் காயத்​தில் இருந்து மீண்டு வந்​துள்ள ஷுப்​மன் கில் கடந்த ஆட்​டத்​தில் 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தார். அதே​போன்று கடந்த ஓராண்​டாக பேட்​டிங்​கில் பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தாத சூர்​யகு​மார் யாத​வும் ரன்​கள் குவித்​தாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யில் உள்​ளார்.

இவர்​கள் இரு​வரும் மீண்​டும் பார்​முக்கு திரும்​பி​னால் அணி​யின் பலம் அதி​கரிக்​கும். கட்​டாக் போட்​டி​யில் இந்​திய அணி பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்சு என இரண்​டிலும் அச்​சமற்ற அணுகு​முறையை வெளிப்​படுத்​தி​யது. பந்​து​வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங் வேகக்​கூட்​டணி தொடக்​கத்​திலேயே தென் ஆப்​பிரிக்க அணி​யின் பேட்​ஸ் ​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுத்​தது.

இதே​போன்று நடு​வரிசை ஓவர்​களில் வருண் சக்​ர​வர்த்​தி, அக்​சர் படேல், ஹர்​திக் பாண்​டியா ஆகியோ​ரும் பலம் சேர்த்​தனர். இவர்​கள் மீண்​டும் ஒரு முறை தென் ஆப்​பிரிக்க அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும்.

தென் ஆப்​பிரிக்க அணி முதல் போட்​டி​யில் பேட்​டிங்​கில் ஒட்​டுமொத்த சரிவை சந்​தித்து இருந்​தது. எய்​டன் மார்க்​ரம், டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், டெவால்ட் பிரே​விஸ், மார்கோ யான்​சன் ஆகியோரை தவிர மற்ற அனைத்து பேட்​ஸ்​மேன்​களும் ஒற்றை இலக்கை ரன்​களை கடக்​க​வில்​லை.

இந்த தோல்​வி​யில் இருந்து மீண்​டு ​வரு​வதற்​கான வழியை எய்டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி கண்டறியக்​கூடும்.

போட்டி நடை​பெறும் முலான்​பூரில் குளிர்ந்த வானிலை நிலவுவதால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி​யில் பெரிய அளவி​லான மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு இல்​லை. மேலும் இந்த மைதானத்​தில் சர்​வ​தேச டி20 போட்டி நடை​பெறு​வது இதுவே முதன்​முறை​யாகும்.

முலான்பூரில் இன்று 2-வது டி20 ஆட்டம்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை - ஆதரவும் எதிர்ப்பும் வலுப்பது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in