ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 281 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 281 ரன்கள் சேர்ப்பு
Updated on
1 min read

புவனேஷ்வர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ஒடிசா அணி​கள் இடையி​லான ஆட்​டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 83 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்புக்கு 281 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்​கள் சேர்த்​தனர். நாராயணன் ஜெகதீசன் 7, வித்​யூத் 12, குரு​சாமி அஜிதேஷ் 0, சோனு யாதவ் 8 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். நிதிஷ் ராஜகோ​பால் 54, கேப்​டன் சாய் கிஷோர் 12 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர்.

ஒடிசா அணி தரப்​பில் ராஜேஷ் மொகன்​டி, கோவிந்தா பாட்வார் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். கைவசம் 3 விக்​கெட்​கள் மீதம் இருக்க இன்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடு​கிறது தமிழ்​நாடு அணி.

ஷுப்​மன் கில் டக்​-அவுட்

பஞ்​சாப் - சவு​ராஷ்டிரா அணி​கள் இடையி​லான ஆட்​டம் சவு​ராஷ்டி​ரா​வில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 47.1 ஓவர்​களில் 172 ரன்​களுக்கு ஆட்டமிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜெய் கோகில் 82 ரன்​கள் சேர்த்​தார். ரவீந்​திர ஜடேஜா 7 ரன்​களில் நடையை கட்டினார். பஞ்​சாப் அணி சார்​பில் ஹர்​பிரீத் பிரார் 6 விக்கெட்​களை வீழ்த்​தி​னார்.

இதையடுத்து விளை​யாடிய பஞ்​சாப் அணி 40.1 ஓவர்​களில் 139 ரன்​களுக்கு சுருண்​டது. கேப்​டன் ஷுப்​மன் கில் 2 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காமல் பார்த் புட் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

பிரப்​சிம்​ரன் சிங் 44, அன்​மோல்​பிரீத் சிங் 35 ரன்​கள் சேர்த்​தனர். சவு​ராஷ்டிரா அணி தரப்​பில் பார்த் புட் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ரவீந்​திர ஜடேஜா, தர்​மேந்​திரசிங் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

33 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய சவு​ராஷ்டிரா அணி முதல் நாள் ஆட்டத்​தின் முடி​வில் 6 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்புக்கு 24 ரன்​கள் எடுத்​தது. ஹர்விக் தேசாய் 6, சிராக் ஜானி 5, ஜெய் கோகில் 8 ரன்​களில் வெளி​யேறினர்.

தர்​மேந்​திரசிங் ஜடேஜா 5 ரன்களு​டன் களத்​தில் இருந்​தார். கைவசம் 7 விக்​கெட்​கள் இருக்க, 57 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள சவு​ராஷ்டிரா அணி இன்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளையாடு​கிறது. முதல் நாள் ஆட்​டத்​தில் மட்​டும் 23 விக்கெட்​கள் வீழ்த்​தப்​பட்​டுள்​ளன.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 281 ரன்கள் சேர்ப்பு
சரியும் மக்கள் தொகையால் திணறும் சீனா: அரசின் கொள்கையும் சேதாரங்களும் - ஓர் அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in