டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் புகைத்த ரியான் பராக்: 25 சதவீதம் அபராதம் விதிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்

Updated on
1 min read

மும்பை: டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் புகைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்குக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டம் நியூ சண்டிகரில் நடைபெற்றது. இதில் 223 ரன்களை வெற்றிகரமாக எட்டி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தின் போதுதான் தனது செயலால் சர்ச்சையில் சிக்கினார் ரியான் பராக்.

இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ரியான் பராக், இ-சிகரேட் புகைத்தார். அந்த காட்சி கேமராவில் பதிவானது. தொடர்ந்து அது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அவரது இந்த செயலை பலர் கண்டித்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து போட்டியின் கள நடுவர்கள், போட்டியின் நடுவரிடம் தெரிவித்தனர். அதன் பேரில் வீடியோ காட்சிகளின் ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் நடுவர்.

ரியான் பராக் இ-சிகரெட் புகைத்தது உறுதி செய்யப்பட்டது. இது ஐபிஎல் நன்னடத்தை விதி 2.21-ஐ மீறிய செய​லாகும். இந்த விவகாரத்​தில் அவருக்கு போட்​டி​யின் ஊதியத்​தில் 25 சதவீதம் அபராதம் வி​திக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்</p></div>
‘ஐபிஎல் ஒரு பெரிய வர்த்தகம்... நியாயமான போட்டிகளை எதிர்பார்க்க முடியாது!’ - முரளிதரன் ஓபன் டாக்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in