

புதுடெல்லி: 72-வது தேசிய வாலிபால் போட்டியை வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
மொத்தம் 58 அணிகள் போட்டியில் களம் காண்கின்றன. போட்டியை காணொலி முறையில் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.