சென்னையில் இன்று தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

சென்னையில் இன்று தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் ஜனவரி 4-ம் தேதி(இன்​று) முதல் 11-ம் தேதி வரை 75-வது தேசிய சீனியர் கூடைப்​பந்​துப் போட்டி நடை​பெறவுள்​ளது.

சென்னை நேரு உள்​ளரங்க மைதானம், பெத்தி செமி​னார் மைதானம் ஆகிய மைதானங்​களில் இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. இந்​திய கூடைப்​பந்து சம்​மேளனம், தமிழ்​நாடு கூடைப் ​பந்து சங்​கம், எஸ்​டிஏடி சார்​பில் இப்​போட்டி நடத்​தப்​படு​கிறது.

கடந்த முறை நடை​பெற்ற போட்​டி​யில் ஆடவர் பிரி​வில் தமிழகம் சாம்​பியன் பட்​டத்​தை​யும், மகளிர் பிரி​வில் மூன்​றாம் இடத்​தை​யும் பெற்​றிருந்​தது. சென்​னை​யில் நடை​பெறும் போட்​டி​யில் ஆடவர் பிரி​வில் மொத்​தம் 65 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. 780 வீரர், வீராங்​க​னை​கள், 100 அலு​வலர்​கள், 195 பயிற்​சி​யாளர்​கள் பங்​கேற்​க​வுள்​ளனர். போட்​டிகளை மொத்​தம் 8,000 பார்​வை​யாளர்​கள் கண்​டு​களிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச கூடைப்​பந்து சம்​மேளன விதி​களின்டி நடை​பெறும் இப்​போட்​டி​யில் அணி​களுக்கு சிறப்​பான வசதி​கள் செய்​யப்​பட்​டு உள்ளன.

முதல் 3 இடங்​களைப் பெறும் அணி​களுக்கு மொத்​தம் ரூ.21 லட்​சம் பரிசுத் தொகை​யாக வழங்​கப்பட உள்​ளது. ஆடவர், மகளிர் பிரிவுகளில் தலைசிறந்த வீரர், வீராங்​க​னைக்கு கார்​கள் பரி​சாக வழங்​கப்​பட​ உள்ளன.

சென்னையில் இன்று தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்கம்
ரொமான்டிக் கதையில் ‘பிக் பாஸ்’ விக்ரமன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in