மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்

மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்
Updated on
1 min read

கொல்கத்தா: கொல்கத்தா மைதானத்​தில் கால்​பந்து ரசிகர்களின் ரகளை​யால் அர்​ஜெண்​டினா கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸி நிகழ்ச்சி பாதி​யில் முடிந்​தது.

இதையடுத்து கைது செய்​யப்பட்ட நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் சதத்ரு தத்தா 14 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்​பப்​பட்​டார். அர்ஜெண்டினா கால்​பந்து ஜாம்​ப​வான் மெஸ்ஸி கலந்​து​கொண்ட நிகழ்ச்சி நேற்று முன்​தினம் கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடை​பெற்​றது. அப்​போது மெஸ்​ஸியை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை டிக்​கெட் வாங்கி ரசிகர்​கள் மைதானத்​தில் குவிந்​திருந்​தனர்.

ஆனால், மெஸ்ஸி மைதானத்​திலிருந்து உடனே கிளம்​பிய​தால் ரசிகர்​கள் ஆத்​திரமடைந்​தனர். இதனால் மைதானத்​தில் தண்​ணீர் பாட்​டில்​களை எறிந்​தும், நாற்​காலிகளை உடைத்​தும், மேடையை அடித்​தும் வன்​முறை, ரகளை​யில் ஈடு​பட்​டனர்.

இதனால் ரசிகர்​கள் மீது போலீ​ஸார் லேசான தடியடி நடத்தி கூட்​டத்தை கலைத்தனர். இதையடுத்து இந்த சம்​பவத்​துக்கு மேற்கு வங்க மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி மன்​னிப்பு கேட்​டார்.

இந்​நிலை​யில் மெஸ்ஸி கலந்​து​கொண்ட நிகழ்ச்​சியை ஏற்​பாடு செய்த நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் சதத்ரு தத்​தாவை போலீ​ஸார் கைது செய்​தனர். இதைத் தொடர்ந்து அவர் நேற்று கொல்​கத்தா பித்​தன்​நகர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டார்.

விசா​ரணை நடத்​திய நீதிப​தி, அவரை 14 நாட்​கள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க உத்​தர​விட்​டார். ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 3 நாட்​கள் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து வருகிறார்​ மெஸ்​ஸி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்
பிரதமர் மோடி​யுடன் மெஸ்ஸி இன்று சந்​திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in