

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் பி.வி. சிந்துவும், ஜப்பான் வீராங்கனையும் 3-ம் நிலை வீராங்கனையுமான அகானே யமாகுச்சியும் மோதினர்.
இந்தப் போட்டியின்போது சிந்து முதல் செட்டில் 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது செட் தொடங்க இருந்தபோது ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து அரை இறுதிக்கு சிந்து முன்னேறினார்.
தற்போது உலகத் தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக 2 முறை பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய், சிராக் ஷெட்டி ஜோடி 10-21, 21-23 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் பஜார் அல்பியான், முகமது பிக்ரி ஜோடியிடம் தோல்வி கண்டது.