இந்திய சுற்றுப் பயணத்துக்கு மெஸ்ஸிக்கு வழங்கிய தொகை ரூ.89 கோடி!

இந்திய சுற்றுப் பயணத்துக்கு மெஸ்ஸிக்கு வழங்கிய தொகை ரூ.89 கோடி!
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தி​யா​வில் சுற்​றுப் ​பயணம் மேற்​கொண்ட அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்​கப்​பட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

கடந்த 13-ம் தேதி கால்​பந்து ஜாம்​ப​வான் மெஸ்ஸி இந்​தி​யா​வுக்கு வருகை தந்​திருந்​தார். கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத், மும்​பை, டெல்லி ஆகிய நகரங்​களில் அவர் சிறப்பு நிகழ்ச்​சிகளில் கலந்து கொண்​டார். ஹைத​ரா​பாத், மும்பை நிகழ்ச்​சிகள் மிகச் சிறப்​பாக நடத்​தப்​பட்​டன. இருப்​பினும், கொல்​கத்​தா​வில் நடந்த நிகழ்​வில் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சிகளுக்கு சதத்ரு தத்தா என்​பவர் ஏற்​பாடு செய்​திருந்​தார். நுழைவுக்​கட்​ட​ண​மாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் ரூபாய் வரை ரசிகர்​களிடம் வசூலிக்​கப்​பட்​டது. சால்ட் லேக் மைதானத்​துக்கு வந்த மெஸ்​ஸியை, அரசி​யல்​வா​தி​களும், பிரபலங்​களும் சூழ்ந்​த​தால் , ரசிகர்​களால் அவரை பார்க்க முடிய​வில்​லை.

10 நிமிடங்​களி​லேயே மைதானத்தை விட்டு மெஸ்ஸி வெளி​யேறி​னார். மெஸ்​ஸியை பார்க்க முடி​யாத​தால் அதிருப்தி அடைந்த ரசிகர்​கள், மைதானத்​தில் இருந்த நாற்​காலிகள் உள்​ளிட்ட பொருட்​களை அடித்து நொறுக்​கினர். அந்த இடமே போர்க்​கள​மானது. பல மணி நேரம் போராடி போலீ​ஸார் நிலை​மையை கட்​டுப்​படுத்​தினர்.

கொல்​கத்​தா​வில் இந்த நிகழ்வை ஒருங்​கிணைத்த சதத்ரு தத்​தா​விடம் இது தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அதில் அவர் சில முக்​கிய தகவல்​களைக் கூறி​யுள்​ளார். அதாவது சால்ட் லேக் மைதானத்​தில் நடந்த நிகழ்ச்​சி​யின்​போது, எதிர்​பா​ராத வகை​யில் பலரும் மைதானத்​துக்​குள் வந்​து​விட்​ட​தாக​வும் அவர்​கள் மெஸ்​ஸியை பின்​னால் இருந்து தொட்​டதும், கட்​டிப்​பிடித்​ததும் அவருக்கு அதிருப்​தியை ஏற்​படுத்​தி​ய​தாக​வும் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில் 3 நாள் சுற்​றுப்​பயண​மாக இந்​தியா வரு​வதற்கு மெஸ்​ஸிக்கு வழங்​கப்​பட்ட தொகை ரூ.89 கோடி என்று சதத்ரு தத்தா தெரி​வித்​துள்​ளார். அரசுக்கு வரி​யாக ரூ.11 கோடி​யும் வழங்​கிய​தாக அவர் தெரி​வித்​துள்​ளார்.

மேலும் அவர் கூறும்​போது, “மெஸ்ஸி வரு​கைக்கு மட்​டும் ரூ.100 கோடி ஆனது. இந்த பணத்​தில் 30 சதவீதம் விளம்​பர​தா​ரர்​கள் மூல​மும், மேலும் 30 சதவீதம் டிக்​கெட் கட்​ட​ணம் மூல​மும் வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது. சால்ட்​லேக் மைதானத்​தில் கட்​டுப்​பாட்​டுடன் நடக்​கும்​படி தொடர்ந்து அறி​வித்​தும் எந்த மாற்​ற​மும் ஏற்​பட​வில்​லை.

மெஸ்​ஸியை சூழ்ந்து கொண்ட விதம் அவருக்கு தர்ம சங்​கடத்தை ஏற்​படுத்​தி​யதுடன் அவரால் ஏற்​றுக் கொள்ள முடிய​வில்​லை. மை​தானத்​தில் 150 பேருக்கு மட்​டுமே பாஸ் வழங்​கப்​பட்​டது. ஆனால், முக்​கிய நபர் ஒரு​வர் வந்த போது கூட்​டம் 3 மடங்​காகியதுடன் அவர் என்னை நிர்​பந்​தம் செய்​தார். அந்த செல்​வாக்கு மிக்க நபர் வந்த பிறகு மெஸ்​ஸி​யின் பயணத் திட்​டத்​தில் மாற்​றம் ஏற்​பட்​டது” என்​றார்.

மெஸ்​ஸி​யின் வரு​கை​யின்​போது சால்ட்​லேக் மைதானத்​தில் நடந்த ரகளை தொடர்​பாக சதத்ரு தத்தா தற்​போது கைதாகி சிறை​யில் உள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. தேசிய அளவில் அதிர்​வலைகளை ஏற்​படுத்​திய இச்​சம்​பவத்​துக்​கு மேற்​கு வங்​க முதல்​வர்​ மம்​தா ​பானர்​ஜி மன்​னிப்​பு கேட்​டதுடன்​ குளறு​படி குறித்​து வி​சா​ரிக்​க சிறப்​பு குழு அமைத்​​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்திய சுற்றுப் பயணத்துக்கு மெஸ்ஸிக்கு வழங்கிய தொகை ரூ.89 கோடி!
இரவு, பகலாக 4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in