

புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கொரியா, இந்தியா மோதும் போட்டிகளை கடினத் தரையில் (ஹார்ட் கோர்ட்) முடிவு செய்யப்பட்டுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான தகுதிச் சுற்று-2 ஆட்டங்கள் செப்டம்பர் 18, 19-ம் தேதிகளில் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகள் கடினத் தரை மைதானங்களில் நடைபெறவுள்ளன. டேவிஸ் கோப்பை போட்டித் தரவரிசையில் இந்தியா 19-வது இடத்திலும், கொரியா 16-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் மோதலில் தென் கொரியா 6-5 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்றும் இந்திய வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் வரும் 10-ம் தேதி (நாளை) அறிவிக்கப்படவுள்ளன.
இதற்கு முன்பு 2016-ல் சண்டீகரில் நடைபெற்ற ஆசியா/ஒஷியானா குரூப்-1 சுற்றுப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதியிருந்தன. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
சியோலில் நடைபெறும் தகுதிச் சுற்று-2-ல் வெற்றி பெறும் அணிகள் டேவிஸ் கோப்பை இறுதிச்சுற்று 8-க்குத் தகுதி பெறும்.