

துபாய்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே கடந்த 3ம் தேதி ராய்ப்பூரில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் 359 ரன்கள் இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் குறிப்பிட்ட நேரத்துக்குள் 2 ஓவர்களை இந்திய அணியினர் குறைவாக வீசியிருந்தனர்.
இது தொடர்பாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஐசிசி விதிகளின்படி ஒவ்வொரு ஓவருக்கும் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்திய அணி வீரர்களின் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.