

சென்னை: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம், ரேடியன்ஸ் பப்ளிக் பள்ளி இணைந்து முஸ்தபா நினைவு கோப்பைக்கான மாவட்ட கால்பந்துப் போட்டிகளை நடத்தின.
மாணவர்கள் பிரிவில் 11 அணிகளும், மாணவிகள் பிரிவில் 7 அணிகளும் பங்கேற்றன. இதில் மாணவர்கள் பிரிவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி பள்ளி முதலிடத்தையும், எம்எஸ்பி சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும் பிடித்தன. மாணவிகள் பிரிவில் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தையும், தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும் பெற்றன.
திண்டுக்கல் ரேடியன்ஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், பள்ளித் தாளாளர் சையது அப்தாஹிர், பள்ளி முதல்வர் ஷகிலா பேபி ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணியின் வீராங்கனை கார்த்திகா அங்கமுத்து, பெங்களூரு எஃப்சி அணியின் நட்சத்திர வீரர் சிவசக்தி, சர்வதேச நடுவர் ரூபாதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.