இந்திய வீராங்​கனை பிரதிகாவுக்கு டெல்லி அரசு ரூ.1.5 கோடி பரிசு

இந்திய வீராங்​கனை பிரதிகாவுக்கு டெல்லி அரசு ரூ.1.5 கோடி பரிசு
Updated on
1 min read

புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சிறப்​பாக விளை​யாடிய டெல்லி கிரிக்​கெட் வீராங்​கனை பிர​திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்​கப்​படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறி​வித்​து உள்​ளார்.

இந்​தி​யா, இலங்​கை​யில் கடந்த மாதம் நிறைவடைந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்​பைத் தொடரில் இந்​திய அணி கோப்​பையைக் கைப்​பற்​றியது. இந்​தப் போட்​டித் தொடரில் 308 ரன்​களைக் குவித்​தார் பிர​திகா ராவல். மேலும் இந்​தத் தொடரில் அதிக ரன்​கள் எடுத்​தவர்​கள் பட்​டியலில் நான்​காவது இடத்​தை​யும் அவர் பிடித்​தார்.

வங்க தேசத்​துக்கு எதி​ரான கடைசி லீக் ஆட்​டத்​தில் விளை​யாடும்​போது காயமடைந்த அவர், அரை​யிறுதி மற்​றும் இறு​திப் போட்டியில் விளை​யாட​வில்​லை.

இந்​நிலை​யில் மகளிர் உலகக் கோப்பை தொடரில் அபார​மாக விளை​யாடிய பிர​தி​கா​வுக்கு முதல்​வர் ரேகா குப்தா ரூ.1.5 கோடி பரிசு வழங்கப்படும் என நேற்று அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து முதல்​வர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளப்பதி​வில் கூறும்​போது, “இன்​று, முதல்​வரின் ‘ஜன் சேவா சதனில்’ இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் திறமை​யான இளம் வீராங்​கனை பிர​திகா ராவலை வரவேற்​றோம்.

எங்​கள் மகள் பிர​தி​கா, டெல்​லிக்​குப் பெருமை சேர்த்​துள்​ளார். விளை​யாட்​டுக்​கான அவரது அர்ப்​பணிப்பு மற்​றும் அவரது சிறப்​பான ஆட்​டத்தை அங்​கீகரிக்​கும் வகை​யில், டெல்லி அரசு அவருக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்க உள்​ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய வீராங்​கனை பிரதிகாவுக்கு டெல்லி அரசு ரூ.1.5 கோடி பரிசு
“திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது” - ஸ்மிருதி மந்தனா விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in