

பவீனாபென்
சென்னை: 3-வது தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சென்னை ஐஐடி-யில் நேற்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 220 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து 62 பேர் பங்கேற்றுள்ளனர். மெட்ராஸ் பட்டணம் ரோட்டரி கிளப், சென்னை ஐஐடி, தமிழக டேபிள் டென்னிஸ் சங்கத்தின் பாரா டேபிள் டென்னிஸ் கமிட்டி ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன.
நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பவீனாபென் ஹம்ஷுக்பாய் படேல் 3-0 (11-3, 11-2, 11-2) என்ற செட் கணக்கில் ரீனா பெகமை தோற்கடித்தார்.