2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல் திறனை கண்காணிக்க திட்டம்

தேர்வுக்குழு உறுப்பினர்கள் போட்டிகளை நேரில் சென்று பார்க்க முடிவு
2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல் திறனை கண்காணிக்க திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு அக்​டோபர்​-நவம்​பர் மாதங்களில் தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா நாடு​களில் நடை​பெற உள்​ளது. இன்​னும் ஒரு வருடம் உள்ள நிலை​யில், இந்த தொடருக்​கான அணியை கட்​டமைக்​கும் முயற்​சி​யில் இந்​திய அணி​யின் தேர்​வுக்​குழு​வினர் களமிறங்கி உள்​ளனர்.

இந்த வகை​யில், 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய அணி​யின் 20 சாத்​தி​ய​மான வீரர்கள் ஏற்​கெ​னவே அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர். இவர்​களின் செயல் திறன்​களை வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் போது, அஜித் அகர்​கர் தலை​மையி​லான தேர்​வுக்​குழு​வினர் கூர்ந்து கவனிப்பார்கள் என்று பிசிசிஐ வட்​டாரங்​கள் தெரிவித்துள்ளன.

தேர்​வுக்​குழு​வில் எஸ்​.எஸ்​.​தாஸ், ஆர்​.பி.சிங், அஜய் ராத்​ரா, பிரக்​யான் ஓஜா ஆகியோ​ரும் இடம் பெற்​றுள்​ளனர். ஐபிஎல் தொடரின் போது தேர்​வுக் குழு உறுப்​பினர்​கள் தங்களுக்கு ஒதுக்​கப்​பட்ட மைதானங்​களுக்கு நேரில் சென்று போட்​டிகளைக் கண்​காணிப்​பார்​கள் என்​றும், மற்ற போட்​டிகளைத் தொலைக்​காட்​சி​யின் வாயி​லாகக் கவனிப்​பார்​கள் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த ஆண்​டுக்​கான ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி பெங்களூரு​வில் தொடங்​கு​கிறது. அன்​றைய தினம் நடை​பெறும் தொடக்க ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு - சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. அஜித் அகர்​கர் மும்​பை​யில் வசித்து வரு​கிறார். இதனால் அவர், அங்கு நடை​பெறும் போட்​டிகளை நேரில் பார்​வை​யிடு​வார்.

எஸ்​.எஸ்​.​தாஸ் கொல்​கத்​தாவில் நடை​பெறும் போட்​டிகளை​யும், ஆர்​.பி.சிங், விஜய் ராத்ரா ஆகியோர் டெல்​லி​யில் நடை​பெறும் போட்​டிகளை​யும் பார்​வை​யிடக்​கூடும். பிரக்​யான் ஓஜா பெங்​களூரு மற்​றும் ஹைதரா​பாத்​தில் நடை​பெறும் போட்​டிகளை பார்​வை​யிட உள்​ளனர்.

பிசிசிஐ மூத்த அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “ஒவ்​வொரு தேர்​வாள​ரும் வாரத்​துக்கு குறைந்​தது ஒரு போட்​டியை​யா​வது நேரடி​யாக மைதானத்​துக்கு சென்று பார்க்க வேண்​டும் என்று பிசிசிஐ திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் மூலம் வாரத்​துக்கு ஐந்து போட்​டிகள் மைதானத்​திலிருந்து நேரடி​யாகக் கண்​காணிக்​கப்​படும். மற்ற போட்​டிகளை அவர்​கள் வழக்​கம்​போலத் தொலைக்​காட்​சி​யின் வாயி​லாகக்​ கண்​காணிக்​க முடியும்​” என்​றார்​.

2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல் திறனை கண்காணிக்க திட்டம்
உச்ச கட்டத்தில் ஈரான் போர்... நடப்பது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in