

நிங்போ: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
சீனாவின் நிங்போ நகரில் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவரான ஆயுஷ் ஷெட்டி, சீன வீரர் ஷி யுகியுடன் மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 8-21, 10-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஷி யுகி, உலக பாட்மிண்டன் வீரர்கள் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.