பிரிஸ்பனில் இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்திய ஆஸி: ஆஷஸ் டெஸ்ட் தொடர்

பிரிஸ்பனில் இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்திய ஆஸி: ஆஷஸ் டெஸ்ட் தொடர்
Updated on
1 min read

பிரிஸ்பன்: நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றது.

கடந்த 4-ம் தேதி இந்த ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் எடுத்தது.

177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (டிச.7) தொடங்கியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் மைக்கேல் நேசர்.

இந்தப் போட்டியில் 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது. ஸ்மித், 9 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். ஹெட் 22, வெதரால்ட் 17, லபுஷேன் 3 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஆஸ்திரேலியா இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

பிரிஸ்பனில் இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்திய ஆஸி: ஆஷஸ் டெஸ்ட் தொடர்
9.5 மணி நேரம் போராடி 202 ரன்கள் விளாசினார் ஜஸ்டின் கிரீவ்ஸ்: நியூஸி. டெஸ்டை டிரா செய்தது மே.இ.தீவுகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in