சென்னையில் அக்.26 முதல் 29 வரை ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி

இந்தியா உட்பட 13 நாடுகள் பங்கேற்பு
சென்னையில் அக்.26 முதல் 29 வரை ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி
Updated on
1 min read

சென்னை: ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்​பியன்​ஷிப் வரும் அக்​டோபர் 26 முதல் 29 வரை சென்னை காரப்​பாக்​கத்​தில் உள்ள கே.சி.ஜி கல்​லூரி​யில் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் இந்​தி​யா, மலேசி​யா, தாய்​லாந்​து, வங்​கதேசம், சிங்​கப்​பூர், உஸ்​பெகிஸ்​தான், மாலத்​தீவு, பூடான், இலங்​கை, ஆப்​கானிஸ்​தான், நேபாளம், ஐக்​கிய அரபு எமிரேட்​ஸ், குவைத் ஆகிய 13 நாடுகளின் அணி​கள் பங்​கேற்​கின்​றன.

இந்​நிலை​யில் இந்த தொடரின் அதி​காரப்​பூர்வ லோகோ மற்​றும் ஜெர்சி அறி​முக விழா சென்னை கிண்​டி​யில் நேற்று நடைபெற்றது. இந்​தி​யா​வின் பாட்​மிண்​டன் நட்​சத்​திர​மும், இரண்டு முறை ஒலிம்​பிக் பதக்​கம் வென்​றவரு​மான பி.​வி.சிந்து சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்டு போட்​டிக்​கான லோகோ மற்​றும் சீருடையை அறி​முகம் செய்து வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில் பி.​வி.சிந்து கூறும்​போது, “டென்​னிஸ் பந்து கிரிக்கெட் விளை​யாட்​டில் ஏறக்​குறைய 300-க்​கும் மேற்​பட்​டோர் இந்​திய அளவில் மத்​திய அரசுப்​பணி​களில் சேர்ந்​துள்​ள​தாக கூறுகின்​றனர். இது சாதாரண விஷ​யம் அல்ல. வீரர், வீராங்கனைகள் பலரை உரு​வாக்கி அவர்​களுக்கு வேலை​வாய்ப்பை பெற்​றுத்தர நாடு முழு​வ​தி​லும் பல போட்​டிகள் நடத்தப்பட வேண்​டும். அதில் ஒன்​றாக தற்​போது சென்​னை​யில் கே.சி.ஜி. கல்​லூரி வளாகத்​தில் 13 நாடு​கள் பங்​கேற்​கும் ஆசிய டென்​னிஸ் பந்து கிரிக்​கெட் போட்டி நடத்​தப்​படு​கிறது. இதி​லும் நமது வீரர்​கள் பிர​காசித்து நாட்​டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்​துகிறேன்​” என்றார்​.

சென்னையில் அக்.26 முதல் 29 வரை ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி
எப்சிஎன்ஆர் திட்டத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்த என்ஆர்ஐ-கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in