

புதுடெல்லி: சர்வதேச வூஷு கூட்டமைப்பு மற்றும் மக்காவ் வூஷு சங்கம் இணைந்து 11-வது சான்டா உலகக் கோப்பை தொடரை மக்காவ் நாட்டில் நடத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் இந்த உலக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 52 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் அபர்ணா, உலக சாம்பியனான வியட்நாமின் தி புவோங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.