Published : 10 Nov 2016 09:53 AM
Last Updated : 10 Nov 2016 09:53 AM

சென்னையின் எப்சி தோல்வி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்சி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின. 16-வது நிமிடத்தில் ரிச்சர்ட்டு காட்ஸியும், 25-வது நிமிடத்தில் புளோரன்ட் மலோடாவும் தலா ஒரு கோல் அடிக்க டெல்லி அணி 2-0 என முன்னிலை பெற்றது.

சென்னை அணி 37-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. பெர்னார்டு மென்டி இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் டெல்லி 2-1 என முன்னிலை வகித்தது. 54-வது நிமிடத்தில் அந்த அணி 3-வது கோலை அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த கோலை லீவிஸ் அடித் தார்.

ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்த நிலையில் புளோரன்ட் மலோடா தனது 2-வது கோலை அடித்தார். முடிவில் டெல்லி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x