செஸ் ஒலிம்பியாட் 2022: ”அழுத்தம் உதவாது” - விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் ஒலிம்பியாட் 2022: ”அழுத்தம் உதவாது” - விஸ்வநாதன் ஆனந்த்
Updated on
1 min read

5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் இம்முறை செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. மாறாக இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்றுகிறார்.

அவர், கூறும்போது, “எந்த பகுதியில் நடைபெற்றாலும் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடுவதை நான் கருத்தில் கொள்ளவில்லை. சமீபகாலமாக எனது கடமைகளை குறைத்து கொண்டு வருகிறேன்.

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு நான் தகுதி பெற முயற்சிக்கவில்லை. உண்மையில், நான் என் மனதை மாற்ற நினைக்கவில்லை. இந்தியாவில் இப்போது பல சிறந்த இளைஞர்கள் உள்ளனர். பிறகு நான் ஏன் திரும்பி வர வேண்டும்.

அவர்கள் நன்றாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் என்னைக் கலந்தாலோசிக்க விரும்பினால் நான் அவர்களை சுற்றி இருக்க முயற்சிப்பேன். எப்படியும் நான் சில வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.

அது அதன் விரிவாக்கமாக இருக்கும். நான் ஒரு உற்சாகமான வழிகாட்டியாக இருப்பேன். ஒரு வழிகாட்டியாக அழுத்தத்தை உணர வேண்டாம் என்று அவர்களுக்கு நினைவூட்டுவதே முக்கிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நம் மீது அழுத்தம் கொடுப்பது எந்த வகையிலும் உதவாது." என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in