Published : 29 Jul 2022 08:36 AM
Last Updated : 29 Jul 2022 08:36 AM

செஸ் ஒலிம்பியாட் 2022 | தங்கத்துக்கான வேட்டை இன்று ஆரம்பம்: அமெரிக்கா, இந்தியா ஏ அணி மீது எதிர்பார்ப்பு

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து போட்டிகள் இன்று பிற்பகல் 3 மணி அளவில் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் தொடங்குகிறது.

போட்டிக்காக மொத்தம் 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரே நேரத்தில் இந்த 700 பலகைகளிலும் விளையாடும் 1400 வீரர்களின் ஆட்டத்தை இணையதளம் வழியாக கண்டுகளிக்கலாம்.

ரஷ்யா, சீனா இந்தத் தொடரில் கலந்து கொள்ளாததால் அனைவரது கவன குவிப்பும் அமெரிக்க அணி மீது திரும்பி உள்ளது. அந்த அணியில் உள்ள 5 வீரர்களில் 4 பேர், உலகத் தரவரிசையில் 14 இடங்களுக்குள் உள்ளனர்.

வலுவான வீரர்களை கொண்ட அந்த அணி 7-வது முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. 11 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் அமெரிக்க அணி பின்னடைவை சந்தித்தாலும் மீண்டுவரக்கூடிய திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணி இம்முறை பதக்க மேடையில் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள நார்வே அணிக்கு முதன்முறையாக பதக்கம் வென்று கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறார் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன். பல்வேறு அணிகளின் பலம் மற்றும் வடிவத்தின் அடிப்படையில், சுமார் 10 நாடுகள் பதக்க வேட்டையை நோக்கி முன்னேறக்கூடும்.

அமெரிக்காவின் மிகக் குறைந்ததரவரிசை வீரர் ஷாங்க்லாண்ட், இவர் மட்டுமே அந்த அணியில் இந்தியாவின் முதல் தரவரிசையில் உள்ள பி. ஹரிகிருஷ்ணாவின் மதிப்பீட்டோடு பொருந்துகிறார். போட்டியை நடத்தும் இந்தியா, தங்கம் வெல்லும்வாய்ப்புகளை கருத்தில் கொள்ளும்போது இது விஷயங்களைமுன்னோக்கி வைக்க உதவும்.

நம்பிக்கைக்குரிய விதித்குஜ்ராத்தி, இளம் வீரரான அர்ஜுன் எரிகைசி, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய எஸ்.எல். நாராயணன் மற்றும்மிகவும் அனுபவம்வாய்ந்த கே. சசிகிரண் ஆகியோர்குழுவின் மற்றஉறுப்பினர்கள் ஆவர். மற்ற நாடுகளின்வாய்ப்புகளைப் பார்க்கும் முன், செஸ் உலகின்எதிர்பார்ப்பை ஏற்கெனவே உயர்த்திய இந்தியாவின் பிஅணியைக் குறிப்பிடுவது அவசியம்.

குகேஷ், நிஹால்சரின், ஆர். பிரக்ஞானந்தா. ரவுனக் சத்வானி ஆகியோர் இளம் திறமையாளர்கள். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த பி.அதிபனும் இருப்பது பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

மேலும் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு கார்ல்சன் நார்வே அணிக்காக விளையாடுகிறார். கார்ல்சன் கடைசியாக 2016-ம் ஆண்டு ஒலிம்பியாட் போட்டியில் விளையாடினார்.

அப்போது தரவரிசையில் ​​12-வது இடத்தில் இருந்த நார்வே 5-வது இடத்தையும், இந்தியா 4-வது இடத்தையும் இடத்தைப் பிடித்திருந்தது. ஸ்பெயின், போலந்து அணிகளும் நன்கு சமநிலையில் உள்ளது. இந்த இரு அணிகளும் போட்டித் தரவரிசையில் அஜர்பைஜானை விட முன்னிலையில் உள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஒவ்வொருஅணியின் முதல் நான்கு வீரர்களைஉள்ளடக்கிய சராசரி ரேட்டிங் புள்ளிகளை விட, அணிசாம்பியன்ஷிப்பில் வீரர்களின் பார்ம்மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு, புகழ் ஒரு சுமையாக இருக்கலாம். தரவரிசையில் பின்தங்கியுள்ள அதிகம் அறியப்படாத அணிகளுக்கு சில நேரங்களில் இது சாதகமாக இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x