Published : 01 Jul 2022 06:31 AM
Last Updated : 01 Jul 2022 06:31 AM
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 20-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பிட்டயபோர்ன் சைவானை 19-21, 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 21-15, 21-7 என்ற நேர் செட்டில் 4-ம் நிலை வீரரான சீன தைபேவின் சோ டியன் ஷெனை வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT