சர்வதேச ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

சர்வதேச ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
Updated on
1 min read

புதுடெல்லி: சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

கடந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. இந்நிலையில் நேற்று முன்தினம் ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச குவார்டேன் கேம்ஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. அவர் மொத்தம் 86.69 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். டிரினிடாட் வீரர் கெஸ்ஹார்ன் 86.64 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெள்ளி வென்றார். உலக சாம்பியனும் கிரனடா வீரருமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.75 மீ. ஈட்டி எறிந்து வெண்கலத்தைக் கைப்பற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in