Published : 18 Jun 2022 06:33 AM
Last Updated : 18 Jun 2022 06:33 AM

பூப்பந்தில் கத்திவாக்கம் பள்ளி முதலிடம்

சென்னை: மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் எண்ணூர், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் முன்னாள் மாணவர்கள் பூப்பந்தாட்ட கிளப் சார்பில் மாநில அளவிலான 4-ம் ஆண்டு பூப்பந்துப் போட்டி கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில்ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி 30-35, 35-30, 35-29 என்ற செட் கணக்கில் மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை தோற்கடித்து முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x