Published : 03 May 2022 03:56 AM
Last Updated : 03 May 2022 03:56 AM

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

படம்: எம்.கருணாகரன்

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டி ஜூலை மாதம் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை நேற்று அகில இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்தது. போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது.

இந்திய அணி விவரம்: ஓபன் பிரிவு அணி-1: விதித் குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், கே.சசிகிரண்.

ஓபன் பிரிவு அணி-2: நிஹால் சரின், டி குகேஷ், பி.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி. பெண்கள் அணி-1: கோனேரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி.

பெண்கள் அணி-2: வந்திகாஅகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரவுத், திவ்யா தேஷ்முக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x