

ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 13-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான சீருடை அறிமுக விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சுமித் மாலிக் சீமா பிஸ்லா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் நரிந்தர் பத்ரா கூறும்போது, “ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வழிமுறைகள் அடுத்த 2 முதல் 3 வார காலங்களில் முடிவடைகிறது. இந்தியாவில் இருந்து 125 முதல் 135 வீரர்கள் தகுதி பெறுவார்கள் என மதிப்பிடுகிறோம். இதன் அர்த்தம் அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்கள் உட்பட 190 பேர் கொண்டதாக இந்திய குழு இருக்கும். டோக்கியோவில் இந்தியா இம்முறை இரட்டை இலக்க பதக்கத்தை எட்ட முடியும். இது முன்னோடியில்லாத சாதனையாக இருக்கும்” என்றார்.
இதுவரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து பங்கேற்க 100 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 56 வீரர்கள், 44 வீராங்கனைகள் அடங்குவர்.- பிடிஐ