அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்
Updated on
1 min read

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேறினார்.

ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 13-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 4-ம் நிலை வீரரான சென் லாங்கை எதிர்த்து விளையாடினார்.

இதில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 15 நிமிடங்களில் 21-13 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட் தொடங்குவதற்கு முன்னதாக காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார் லாங் சென்.

இதனால் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in