Published : 16 Nov 2019 10:21 AM
Last Updated : 16 Nov 2019 10:21 AM

அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேறினார்.

ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 13-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 4-ம் நிலை வீரரான சென் லாங்கை எதிர்த்து விளையாடினார்.

இதில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 15 நிமிடங்களில் 21-13 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட் தொடங்குவதற்கு முன்னதாக காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார் லாங் சென்.

இதனால் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x