Published : 20 Jul 2019 05:01 PM
Last Updated : 20 Jul 2019 05:01 PM
இந்தோனேசியா ஓபன் பாட்மிண்டன் தொடர் அரையிறுதியில் 2ம் நிலையில் உள்ள சீன வீராங்கனை சென் யு ஃபெய் என்பவரை 21-19, 21-10 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2019-ம் ஆண்டின் முதல் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து.
ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 4ம் நிலை ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியுடன் மோதுகிறார் சிந்து.
முதல் செட்டில் சீன வீராங்கனை சென் யு ஃபெய் 18-14 என்று முன்னிலை வகித்தார், ஆனால் அப்போதுதான் திடீர் எழுச்சி பெற்ற பி.வி.சிந்து அபாரமான சில ஷாட்களினால் வென்று 18-18 என்று சமன் செய்தார்.
சிந்துவின் சக்தி வாய்ந்த ஸ்மாஷ் மற்றும் துல்லியமான ட்ராப் ஷாட்களுக்கு சீன வீராங்கனையிடம் பதில் இல்லை. முதல் செட்டை 21-19 என்று கைப்பற்றினார் சிந்து.
2வது செட்டிலும் சீன வீராங்கனை ஃபெய் 4-0 என்று முன்னிலை வகித்தார். ஆனால் இந்த முறையும் சிந்துவின் சமயோசிதமான சில ஷாட்களுக்கு ஃபெயிடம் பதில் இல்லாமல் போக 11-8 என்று சிந்து முன்னிலை பெற்றார்.
இதன் பிறகு முழுக்க முழுக்க சிந்துவின் ஆதிக்கம்தான், ஃபெய்யின் சர்வை அபாரமாக எதிர்கோண்ட சிந்து, எதிர்த்தாக்குதலில் சிறந்து விளங்க அதன் பிறகு 2 புள்ளிகளியே பெற்று 21-10 என்று தோல்வியடைந்தார் சீன வீராங்கனை.
சென் யு ஃபெய் ஷாட்களில் சிலபல தவறுகளை இழைத்தார், இதனை சிந்து தனக்குச் சாதகமாக மாற்றி கொண்டார்.
கடைசியில் சீன வீராங்கனை தோல்வியினால் அதிர்ச்சியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT