Published : 10 Sep 2016 09:26 AM
Last Updated : 10 Sep 2016 09:26 AM
பவர்பேக் டென்னிஸ் அகாடமி சார்பில் நீதிபதி பி.எஸ். கைலாசம் நினைவு 2-வது ஐ.டி.எப். சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியின் பிரதான சுற்று வரும் 12-ம் தேதி தொடங்கு கிறது. போட்டிகள் வருகிற 17-ம் தேதி வரை தரமணியில் உள்ள சி.பி.டி. மைதானத்தில் நடைபெறுகிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியின் மொத்த செலவு ரூ. 12 லட்சமாகும்.
விஷ்ணுவர்த்தன், என். விஜய்சுந்தர் பிரசாந்த், ராம் பாலாஜி, சசிகுமார் முகுந்த் மற்றும் மரீக் ஜலோவிஸ் (செக்குடியரசு) போன்ற முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT