கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி

கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி
Updated on
1 min read

முதலாவது அனைத்து இந்திய ஓபன் ரேட்டிங் செஸ் போட்டி கொடைக்கானலில் வரும் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சர்வதேச மாஸ்டர்ஸ் மற்றும் எப்ஐடிஇ மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாடு முழுவதும் இருந்து 155 வீரர்கள் இந்த தொடரில் விளையாட உள்ளனர். முன்னாள் தேசி சாம்பியன் மற்றும் சர்வதேச மாஸ்டர் ஆர்.பாலசுப்பிரமணியம், இந்திய மாஸ்டர் எஸ்.கிருஷ்ணன், ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் பில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.இளம்பார்தி, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்வராஜ் பாலித் உள்ளிட்ட முன்னணி வீரர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

ரூ.3.10 லட்சம் பரிசுத்தொகை கொண்ட இந்த தொடரை தமிழ்நாடு செஸ் சங்கத்துடன் இணைந்து இந்தியன் செஸ் பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்ட செஸ் சங்கத்தின் கீழ் இயங்கும் மவுன்ட் செஸ் அகாடமி, கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் சர்வதேச பள்ளி ஆகியவை நடத்துகின்றன. இந்த தொடரானது சுவிஸ் பார்மட்டில் 8 சுற்றுகளை கொண்டதாக நடத் தப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in