மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி
Updated on
1 min read

மகளிர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் அணி ஆடியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. இந்நிலையில் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹீதர் நைட் 109 பந்துகளில் 106 ரன்களையும், நடாலியே சிவர் 92 பந்துகளில் 137 ரன்களையும் குவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 377 ரன்களைக் குவித்தது. இது பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட 2-வது மிகப்பெரிய ஸ்கோராகும்.

இதைத்தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்களில் 107 ரன்களை எடுத்திருந்த நிலை யில் மழை குறுக்கிட்டது. அதன் பிறகு ஆட்டம் மீண்டும் நடைபெற வில்லை. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 107 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது இந்த தொடரில் பாகிஸ்தான் அணி பெற்ற 2-வது தோல்வியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in