

நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் விருதுக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங், லண்டன் ஒலிம் பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமாரின் பெயரை பத்மபூஷண் விருதுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பரிந்துரை செய் துள்ளது. ஸ்னூக்கர் போட்டியில் 15 முறை உலகச்சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானியும் இந்த விருதுக்கான போட்டியில் உள்ளார். சுஷில்குமாரின் பெயர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைக்கப்பட்ட போது, அவருக்கு இவ்விருது கிடைக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
சுஷில்குமாரின் பயிற்சியா ளரான யாசிர் சிங், மல்யுத்த வீராங் கனையான அல்கா தோமர் ஆகியோ ரின் பெயர்கள் பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய், டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல் ஆகியோரும் இந்த விருதுக்கான போட்டியில் உள்ளனர்.