முதல் டி 20-ல் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

முதல் டி 20-ல் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
Updated on
1 min read

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செஞ்சுரியனில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 10 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் குவித்தது.

டேவிட் மில்லர் 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசினார். கேப்டன் பெகார்டின் 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் குலசேகரா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதையடுத்து 127 ரன்கள் இலக்குடன் இலங்கை பேட் செய்தது. அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான டிக்வெலா 19 பந்துகளில், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் சேர்த்தார்.

தென் ஆப்பிரிக்க அணி

தரப்பில் லங்கி கிடி, இம்ரன் தகிர் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர். 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in