Published : 10 Sep 2016 09:41 AM
Last Updated : 10 Sep 2016 09:41 AM

இந்தியா ஏ முன்னிலை

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 4 நாள் அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

பிரிஸ்பனில் பிங்க் பந்தில் நடை பெற்று வரும் இந்த ஆட்டத்தில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் முதல் இன்னிங்ஸில் 81.3 ஓவர்களில் 230 ரன் களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 77, பயாஸ் பாஸல் 48 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா ஏ தரப்பில் ஸ்வெப்சன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்த நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை விளையாடியது. அந்த அணி 63.3 ஓவரில் 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக ஹென்ட் ஸ்கோம் 87, ஜோ பர்ன்ஸ் 78 ரன்கள் எடுத்தனர். இந்தியா ஏ அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 2 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ஏ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது.

அகில் ஹெர்வாத்கர் 23, பயாஸ் பாஸல் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 6, மணீஷ் பாண்டே 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ அணி 46 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் கைவசம் 8 விக்கெட்களுடன் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x