

டொராண்டோ: கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் கனடா ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், நடப்பு சாம்பியனும் உலகத் தரவரிசையில் 7-வது இடமும் வகிக்கும் பெல்ஜியத்தின் டின்னே கிலிஸுடன் மோதினார்.
36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனஹத் சிங் 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள வீராங்கனையை அனஹத் சிங் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.