திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வு!

திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வு!
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் இணைந்து திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வை நடத்தியது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்வுப் போட்டியில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 160 வீரர்கள் கலந்துகொண்டனர்

தேர்வுப் போட்டியை தமிழ்நாடு கால்பந்து சங்கத் தலைவர் எஸ். சண்முகம் தொடங்கி வைத்தார். அகில இந்திய கால்பந்து சம்மேளனம் மற்றும் ஃபிபா டேலண்ட் அகாடமிக்காக இந்த கால்பந்து வீரர்கள் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வாளர்களாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம், ஃபிபா டேலண்ட் அகாடமியைச் சேர்ந்த பிரணவ் பிரவீன், முன்னாள் இந்திய அணி வீரர் அம்ஜத் ஆகியோர் இருந்தனர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இறுதித் தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in