சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் சாட்விக் - ஷிராக் ஜோடி

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் சாட்விக் - ஷிராக் ஜோடி
Updated on
1 min read

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவின் கோ சே ஃபீ, நூர் இஸ்ஸுதீன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in