தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் சதீஷ் கருணாகரன்

தேசிய விளையாட்டு போட்டியில் பாட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்க பதக்கம் வென்ற தமிழகத்தின் ஆத்யா வரியத், சதீஷ் கருணாகரன்.
தேசிய விளையாட்டு போட்டியில் பாட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்க பதக்கம் வென்ற தமிழகத்தின் ஆத்யா வரியத், சதீஷ் கருணாகரன்.
Updated on
1 min read

டேராடூன்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உத்தராகண்டின் சூர்யக்‌ஷ் ராவத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆத்யா வரியத், சதீஷ் கருணாகரன் ஜோடி 21-11, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா வின் தீப் ரம்பியா, அட்சய வரங் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான 3X3 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி அரை இறுதியில் 15-16 என்ற கணக்கில் கேரளாவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in