சாம்பியன்ஸ் டிராபி: பாக். வீரர் சயீம் விலகல்

சாம்பியன்ஸ் டிராபி: பாக். வீரர் சயீம் விலகல்
Updated on
1 min read

கராச்சி: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் விலகியுள்ளார்.

பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப்புக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக பகர் ஸமான் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in