போபண்ணா ஜோடி முதல் ஆட்டத்தில் தோல்வி

போபண்ணா ஜோடி முதல் ஆட்டத்தில் தோல்வி
Updated on
1 min read

துரின்: ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் இத்தாலியின் சிமோன் பொலேலி, ஆண்ட்ரியா வவஸ்சோரி ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் போபண்ணா - எப்டன் ஜோடி 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் 56 நிமிடங்கள் நடைபெற்றது. போபண்ணா - எப்டன் ஜோடி தங்களது அடுத்த ஆட்டத்தில் எல் சால்வடோரின் மார்செலோ அரேவலோ, குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடியுடன் மோதுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in