2024-ல் ஓய்வு: ஆன்டி முர்ரே அறிவிப்பு

2024-ல் ஓய்வு: ஆன்டி முர்ரே அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: 2024-ம் ஆண்டில் நான் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று பிரிட்டனைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே கூறினார்.

பிரிட்டனைச் சேர்ந்த மிகச் சிறந்த டென்னிஸ் வீரர்களுள் ஒருவர் ஆன்டி முர்ரே. இதுவரை 2 முறை விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் முர்ரே.டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நேற்று அவர் கூறும்போது, “2024-ம் ஆண்டில் நான் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஜனவரியில் நடைபெறும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பேன். இந்த ஆண்டு முழுவதும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in