Published : 05 Nov 2023 05:01 PM
Last Updated : 05 Nov 2023 05:01 PM

ODI WC 2023 | சதத்தை நோக்கி முன்னேறும் கோலி - இந்தியா 245/3

கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் அரைசதம் கடந்தனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தனர். ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

ஷுப்மன் கில் 24 பந்துகளில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் ஓவருக்கு 6 ரன்கள் ரேட்டைக் குறையாமல் பார்த்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். 77 ரன்களை எடுத்திருந்த ஸ்ரேயஸ் இங்கிடி ஓவரில் கேட்சாகி வெளியேறினார்

இதனால், 34 ஓவரில் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து சதம் அடிக்கும் முனைப்பில் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் கோலி சதமடிக்கும் பட்சத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை சமன் செய்வார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x