திருப்பந்தியூர் செல்வ விநாயகருக்கு 18 ஆயிரம் கடலை உருண்டை அலங்காரம்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருப்பந்தியூர் செல்வ விநாயகர் நேற்று 18 ஆயிரம் கடலை உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருப்பந்தியூர் செல்வ விநாயகர் நேற்று 18 ஆயிரம் கடலை உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Updated on
1 min read

திருவள்ளூர்: திரு​வள்​ளூர் அருகே திருப்​பந்​தி​யூரில் உள்ள செல்வ விநாயகர் கோயி​லில் சங்​கடஹர சதுர்த்​தியை முன்​னிட்​டு, நேற்று செல்​வ வி​நாயகர் 18 ஆயிரம் கடலை உருண்​டைகளால் அலங்​கரிக்​கப்​பட்​டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரு​வள்​ளூர் அருகே உள்ள திருப்​பந்​தி​யூர் கிராமத்​தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் நேற்று ஆனி மாத சங்​கடஹர சதுர்த்​தியை முன்​னிட்டு நேற்று சிறப்பு வழி​பாட்டு நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

இதில், நேற்று காலை 9 மணி முதல், இரவு 9.30 மணிவரை செல்​வ ​வி​நாயகர் 18 ஆயிரம் கடலை உருண்​டைகளால் அலங்​கரிக்​கப்​பட்​டு, பக்​தர்​களுக்கு அருள்பாலித்தார்.

மாலை 5 மணி​யள​வில் வழித்​துணை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை திருக்​கயி​லாய வாத்​திய இசை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மூன்று வேளை​யும் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது.

இந்​நிகழ்​வு​களில், திருப்​பந்​தி​யூர், பண்​ணூர், கொட்​டையூர், மப்​பேடு, கீழச்​சேரி, உளுந்​தை, பேரம்​பாக்​கம் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர்​.

<div class="paragraphs"><p>சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருப்பந்தியூர் செல்வ விநாயகர் நேற்று 18 ஆயிரம் கடலை உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். </p></div>
கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் இன்று அமோனியா அகற்றும் பணி: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in