திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா: பூர்வாங்க பூஜைகள் இன்று தொடக்கம்

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா: பூர்வாங்க பூஜைகள் இன்று தொடக்கம்
Updated on
1 min read

காரைக்கால்: திருநள்​ளாறு தர்​பாரண்​யேஸ்​வரர் கோயி​லில் பிரம்​மோற்சவ விழாவுக்​கான பூர்​வாங்க பூஜைகள் இன்​று (மே 8) தொடங்​க​ உள்​ளன.

திருநள்​ளாறு கோயி​லில் ஆண்​டு​தோறும் பிரம்​மோற்சவ விழா 18 நாட்​கள் சிறப்​பாக நடத்​தப்​படு​வது வழக்​கம். நிகழாண்டு இவ்​விழாவுக்​கான பந்​தல்​கால் முகூர்த்​தம் ஏப்​.23-ம் தேதி நடை​பெற்​றது. சார்பு தலங்​களான ஐயனார், பிடாரி​யம்​மன், மாரி​யம்​மன் கோயில்​களில் உற்​சவம் அண்​மை​யில் நிறைவடைந்​தது.

தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் கொடியேற்​றத்​துக்கு முன்​பாக உற்​சவத்​தின் பூர்​வாங்க பூஜைகள் இன்று காலை 7 மணிக்கு விக்​னேஸ்வர பூஜை​யுன் தொடங்​கு​கிறது. நாளை (மே 9) மகா கணபதி ஹோமம், மறு​நாள் வாஸ்து சாந்தி பூஜை, 11-ம் தேதி மிருத்​சங்​கிரஹணம், அங்​கு​ரார்ப்பண பூஜைகள் நடை​பெற உள்​ளன.

12-ம் தேதி ஆச்சார்ய ரக் ஷாபந்​தனம் செய்​யப்​பட்​டு, 13-ம் தேதி பிரம்​மோற்சவ கொடியேற்​றம் நடை​பெறவுள்ளது. இதைத் தொடர்ந்து முக்​கிய நிகழ்ச்​சிகள் நடை​பெறவுள்​ளன.

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா: பூர்வாங்க பூஜைகள் இன்று தொடக்கம்
ஆபரேஷன் சிந்தூர் நினைவாக 500 கிலோ எடையில் ஐம்பொன் நினைவுத் தூண்: கும்பகோணம் பகுதியில் தயாராகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in