சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருத்தேரோட்டம்!

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருத்தேரோட்டம்!
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை விழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இந்த விழா, கடந்த நவ.24-ம் தேதி இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

கடந்த நவ.25-ம் தேதி காலை கொடியேற்றம், தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளுதலும்,இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.டிச26-ம் தேதி முதல் டிச.5-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.

பிரதான நிகழ்ச்சியான நேற்று (டிச.3) காலை 7 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வள்ளி-தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

ஏராளமானோர் பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா, தீபக்காட்சி ஆகியவையும் நடைபெற்றது.

டிச.4-ம் தேதி படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு, காவிரியில் தீர்த்தவாரியும், இரவு 7.30 மணிக்கு அவரோகணமும், டிச.5- ம் தேதி இரவு வள்ளி, தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தலும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை துணை ஆணையர் உமாதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருத்தேரோட்டம்!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in