கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தீர்த்தவாரி

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தீர்த்தவாரி
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி தீர்த்தவாரி இன்று நடைபெற்றது.

திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகையம்மன்-பிறையணியம்மன் உடனாய நாகநாத சுவாமி கோயிலில் நவக்கிரஹங்களில் ஒன்றாக ராகு பகவான் தனி சன்னதியில் தனது இரு மனைவிகளான நாகவல்லி-நாககன்னியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு டிச.4-ம் தேதி முன்னை முதல்வன் வழிபாடு, நிலமகள் வழிபாடு, திருமண் எடுத்தல் முளைப்பாரிகையிடுதல் நடைபெற்றது.

டிச.5ம் தேதி பஞ்சமூர்த்திகள் காட்சியும், கொடியேற்றம் நடைபெற்றது. டிச.6ம் தேதி முதல் டிச.15ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. கடந்த டிச.13ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் ஆடவல்லான் புறப்பாடு நடைபெற்றது.

பிரதான நிகழ்ச்சியான கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாத் தீர்த்தவாரியையொட்டி டிச.14ம் தேதி காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் வீதியுலாவாக புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சூரிய புஷ்கரணி திருக்குளக்கரைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து, அஸ்ரத்தேவருக்கு 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.

அப்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, அவரோஹணம் நடைபெற்றது. டிச.15ம் தேதி விடையாற்றியும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தீர்த்தவாரி
தோல்வியுடன் விடைபெற்றார் பிரபல WWE வீரர் ஜான் சீனா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in