பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலையில் விரைவு அதிரடிப்படை பொறுப்பேற்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட  மத்திய விரைவு அதிரடிப்படை குழுவினர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய விரைவு அதிரடிப்படை குழுவினர்.

Updated on
1 min read

குமுளி: சபரிமலை​யில் பக்​தர்​கள் கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த விரைவு அதிரடிப்​படைக் குழு நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டது. பக்​தர்​கள் உடனடி முன்​ப​திவை நம்பி வர வேண்​டாம் என்று தேவசம் போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல வழி​பாடு தொடங்​கிய​தில் இருந்தே உடனடி முன்​ப​திவு மூலம் வரை​முறை​யின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர். மேலும், ஆன்​லைன் மூலம் முன்​ப​திவு செய்​தவர்​களும் உரிய தேதி​யில் வராமல் வேறு நாட்​களில் தரிசனத்​துக்கு வந்​தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்​பட்​டது.

கேரள உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி `ஸ்​பாட் புக்​கிங்' 5 ஆயிர​மாக குறைக்​கப்​பட்​டது. இதையடுத்​து, கடந்த சில நாட்​களாக சபரிமலை​யில் நெரிசல் குறைந்​துள்​ளது. வரும் 25-ம் தேதி முதல்இந்த நடை​முறை​யில் மாறு​தல் இருக்​கலாம். இந்​நிலை​யில், சபரிமலை பாது​காப்​புக்​காக மத்​திய அரசின் விரைவு அதிரடிப் படைக் குழு (ரேபிட் ஆக்​சன் ஃபோர்​ஸ்) சபரிமலை வந்​தது.

கொல்​லத்​தைச் சேர்ந்த துணைத் தளபதி பிஜு​ராம் தலை​மை​யில் 140 பேர் கொண்டகுழு நேற்று பாது​காப்​புக்​குப் பொறுப்​பேற்​றுக் கொண்​டது. இதே​போல, கோயம்​புத்​தூரில் இருந்​தும் மத்​தி​யப்​படை வந்​துள்​ளது. இவர்​கள் சுழற்சி முறை​யில் 3 ஷிப்ட்​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர். மகர​விளக்கு பூஜை முடி​யும் வரை இக்​குழு​வினர் இங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படு​வர்.

இவர்​களுக்கு நேற்று சந்​நி​தானத்​தில் பிராந்​திய மொழியைக் கையாளுதல் குறித்த தொடக்​கநிலை பயிற்சி அளிக்​கப்​பட்​டது. சபரிமலைக்கு தமிழகம், கேரளா, கர்​நாட​கா, ஆந்​தி​ரா,தெலங்​கானா உள்​ளிட்ட மாநிலங்​களில் இருந்து அதிக பக்​தர்​கள் வரு​கின்​றனர். ஆகவே, அந்​தந்த மாநில மொழிகளில் பக்​தர்​களை ஒழுங்​குபடுத்​து​வதற்​கான வார்த்​தைகள் குறித்து விளக்​கம் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், சபரிமலை தரிசனத்​துக்​கான முன்​ப​திவு​கள் டிசம்​பர் வரை நிறைவடைந்​தன. ஆன்​லைன் பதிவு​தா​ரர்​கள் மட்​டுமே சுவாமி தரிசனம் செய்​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. வர இயலாதவர்​கள் முன்​ப​திவை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும். அந்த இடம் உடனடி முன்​ப​திவுக்கு மாற்​றப்​படும். எனினும், ஸ்பாட் புக்​கிங்கை முழு​மை​யாக நம்​பிவர வேண்​டாம் என்று தேவசம் போர்டு அதி​காரி​கள் கேட்​டுக் கொண்​டுள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் கூறும்​போது, "உடனடி முன்​ப​திவுக்கு பல மணி நேரம் காத்​திருந்​தால் மட்​டுமே அனு​மதி அளிக்​கப்​படும். குழு​வுடன் இணைந்து செல்​லும்​போது, குறித்த நேரத்​தில்​ கிளம்​புவ​தில்​ சிரமம்​ ஏற்​படலாம்​" என்​றனர்​.

<div class="paragraphs"><p>சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட  மத்திய விரைவு அதிரடிப்படை குழுவினர்.</p></div>
கோவை, ஈரோடு மாவட்டங்களில் நவ. 25, 26-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in