அருமறை இறங்கிய அருள் மாதம் ரமலான்!

அருமறை இறங்கிய அருள் மாதம் ரமலான்!
Updated on
2 min read

புனித ரமலான் மாதத்தை இறைவன் அடையாளப்​படுத்​தும்​போது, ‘ரமலான் மாதம் எத்​தகையதென்​றால் அதில்​தான் மனிதர்​களுக்கு முழு​மை​யான வழி​காட்​டி​யாக​வும், தெளி​வான சான்​றுகளைக் கொண்​ட​தாக​வும் (சத்​தி​யத்​தை​யும், அசத்​தி​யத்​தை​யும்) பிரித்​தறி​விப்​பது​மான அல்​குர்​ஆன் அருளப்​பட்​டது’ என்று கூறுகிறார்.

ஆண்டின் பன்​னிரண்டு மாதங்​களில் ரமலான் பிர​தான​மானது. இம்​மாதத்​தில்​தான் தீய சாத்​தான்​களுக்கு விலங்​கிடப்​படு​கிறது.

சுவனத்​தின் வாயில்​கள் திறக்​கப்​பட்டு நரகத்தின் வாயில்​கள் அடைக்​கப்​படு​கின்​றன. இம்​மாதத்​தில் செய்​யப்​படும் வணக்க வழிபாடு​கள் ஏனைய நாட்​களில்; செய்​யப்​படு வதைவிடப் பன்​மடங்கு அதிக நன்​மை​களை ஈட்​டித் தரு​கின்​றன. பாவ​மன்​னிப்​புக்​கான நீண்ட வாய்ப்பு வழங்​கப்​படு​கின்​றது. தவறு செய்​பவர்​கள் திருந்தி தமது வாழ்க்​கைத் திசையை நல்​வழி நோக்​கித் திருப்​புவதற்கு சந்​தர்ப்​பம் அளிக்​கப்​படு​கின்​றது. இவ்​வாறு எண்​ணற்ற சிறப்​பு​களை இம்​மாதம் கொண்​டிருந்​த​போ​தி​லும், அடிப்​படை​யான சிறப்பு அல்​குர்​ஆன் அருளப்​பட்​ட​தாகும்.

பிறிதோர் இடத்​தில், அதனை கண்ணி​யமிக்க இரவில் இறக்​கிய​தாக​வும், அந்த இரவு ஆயிரம் மாதங்​களை​விடச் சிறந்​தது, அருள் வளம் பொதிந்​தது என்​றும் இறைவன் கூறுகிறான். அல்​குர்​ஆன் அருளப்​பட்ட மாதத்​துக்​கும், இரவுக்​கும் ஏன் இத்​தகைய பெருமை என்​பதை நாம் சிந்​திக்க வேண்​டும்.

அல்​குர்​ஆன் சாதாரண நூல் அல்ல. அது சர்வ லோகங்​களின் இரட்​சக​னிட​மிருந்து இறக்​கப்​பட்​டது. அதனைச் சுமந்து வந்தவானவர் கோமான் ஜிப்​ரீலும் சாதா​ரண​மானவரல்ல. அதனைப் பெற்று மனித குலத்​துக்குப் போதித்து நடை​முறைப்​படுத்​தி​ய​வர். படைப்​பினங்​களில் சிறந்த இறு​தித்​தூதர் முஹம்​மது (ஸல்) அவர்​கள். எனவே, அவ்​வகை​யில் அதன் ஏற்​றம் மட்​டிட முடி​யாத​தாகும்.

இவ்​வேதம் அரபி மொழி​யில் அருளப்​பட்​டது. இருப்​பினும் இது அரபியர்​களுக்கு மட்​டுமல்​லாது, அகிலத்​தார் அனை​வருக்​கு​மான வழி​காட்​டி​யாகும். ஏனைய வேதங்​களைப் போன்று குறிப்​பிட்ட காலம், இடம், இனம், மொழி என சுருங்​கிய வட்​டத்​தைக் கொண்​ட தல்ல. அவை ஆது கூட்​டத்​தா​ருக்​கு, இஸ்​ரவேலர்​களுக்​கு, ஈஸா​வின் சமூகத்​தா​ருக்கு என குறிப்​பிட்ட இனங்​களுக்கு அருளப்​பட்​டன. ஆனால், அல்​குர்​ஆன் முஹம்​மது நபி​யின் சமூகத்​துக்கு மட்​டும் அருளப்​பட்ட வேதமில்​லை. ஒட்​டுமொத்த மனித சமூகத்​துக்​கும் அருளப்​பட்​ட​தாகும். அதேவேளை, இறைத்​தூதரின் வாழ்க்​கைக் காலத்​துடன் முடிவு பெறு​வதும் அல்ல. பிரபஞ்​சம் தழு​விய​தாக உலக அழி​வுவரை தொடரக்​கூடிய அனை​வருக்​கு​மான வேத​மாகும்.

எனவே​தான் இறைவன், ‘இது அகிலத்​தார் அனை​வருக்​கும் நல்​லுப​தேசமேயன்றி வேறில்​லை’ எனக் கூறுகிறான். ரமலான் என்​றவுடன் நினை​வுக்கு வரு​வது அல்​குர்​ஆன்​தான். அதனைக் கொண்டே ரமலான் தன்னை அலங்​கரித்​துக் கொள்​கிறது.

எந்த வணக்​க​மும் அந்​தந்த காலத்​தின் தேவையை, அவசி​யத்​தைக் கருதி செய்​யப்பட வேண்​டும். அந்த அடிப்​படை​யில் பார்த்தால், ரமலான் மாதத்​தின் அமல்​கள் முழுக்க குர்​ஆனை மைய​மாகக் கொண்​ட​தாகும்.

தொழுகை, நோன்பு உள்​ளிட்ட ஏனைய வணக்​கங்​களைப் பார்த்​தாலோ, கேட்​டாலோ நன்மை கிடைக்​காது. ஆனால், அல்​குர்​ஆன் ஓதி​னாலும், பிறர் ஓது​வதை செவிமடுத்​தா​லும் நன்மை கிடைக்​கும். எனவே​தான், வணக்​கங்​களில் சிறந்​தது குர்​ஆன் ஓது​வது என்​றும், அது சலிப்பை ஏற்​படுத்​தாது என்​றும் நபி அவர்​கள் கூறி​னார்​கள்.

பொது​வாக, எந்த ஒரு புத்​தகத்​தை​யும் ஒரு முறை, இரு முறை படிக்​கலாம். அதற்கு மேல் சலிப்பு ஏற்​பட்​டு​விடும். ஆனால் எத்​தனை முறை ஓதி​னாலும், கேட்​டாலும் சலிக்​காதது திரு​மறை குர்​ஆன் ஆகும். இஸ்​லாமியர்​கள் ஒவ்​வொரு நாளும் தொழுகை​யிலும், பிற நேரங்​களி​லும் பலமுறை கேட்​டாலும் சலிப்பு ஏற்​படு​வ​தில்​லை.

அகிலத்​தார் அனை​வரும் படித்​துப் பயன்​பெறும் வகை​யில் அல்​குர்​ஆனை இலகுவாக ஆக்​கி​யிருப்​ப​தாக இறைவன் குறிப்​பிடு​கிறான். பொது​வாக, ஒரு மொழியில் உள்ள நூலை அந்நியர்கள் மனனமிடு​வதோ அல்​லது எழுது​வதோ அசா​தா​ரண​மானது. ஆனால் திரு​மறை​யின் விஷ​யத்​தில் மட்​டும் இது மாறு​படு​கிறது. குர்​ஆனை அரபிகள் மனனம் செய்​திருப்​ப​தை​விட அதிக எண்​ணிக்கை​யில் அரபு மொழி பேசாத லட்​சக்​கணக்​கான நபர்​கள் மனனமிட்​டுள்​ளார்​கள் என்​பது ஆச்​சரிய​மான செய்​தி​யாகும்.

1,500 வருடங்​களுக்கு முன்​னர் மனித கற்​பனை​யில் உதித்​திருக்க முடி​யாத அறி​வியல் உண்​மை​களை​யும், தொல்​பொருள் ஆய்​வு​கள் இன்று உறு​திப்​படுத்​தும் எத்​னையோ வரலாற்​றுச் சான்​றுகளை​யும் அல்​குர்​ஆன் தன்​னகத்தே கொண்​டுள்​ளது.

இத்​திரு​மறை​யின் மூல​மாக இப்​புனித மாதத்​தில்​ அகில மாந்​தர்​கள்​ அனை​வர்​ மீதும் இறைவன்​ அருள்​புரி​வா​னாக!

-முனைவர் அலி இப்ராஹிம் ஜமாலி, பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி

அருமறை இறங்கிய அருள் மாதம் ரமலான்!
ரமலான் நோன்பு இன்று முதல் தொடக்கம்: அரசு தலைமை காஜி உஸ்​மான் மொய்​தீன் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in